நடிகை நயன் தாரா அவர் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ஒரு காதல் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
நேற்று முன் தினம் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அதில், நடிகை நயன்தாரா சில முக்கிய காட்சிகளில் நடித்து வருகிறார்.
இவர் இங்கிருக்கிறார் என தெரிந்து கொண்ட அப்பகுதி மக்கள் கும்பலாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டக்குழு சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்களுக்கும் அங்கே திரண்டிருந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வாக்குவாதமாக நீண்டது.