Balakrishnagaru
Balakrishnagaru

1.25 கோடி நிவாரணம் நிதியை பங்கிட்ட தெலுங்கு நடிகர்

கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி நாளுக்குநாள், கண்டங்கள் தாண்டி பரவிக்கொண்டு வருகிறது. இந்த நோய்க்கான குணப்படுத்தும் ஊசியையும், தடுப்பூசியும் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் இரவு பகலாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் 144 உத்தரவை இந்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியில் உள்ளது. இதனால் இந்தியாவில், மாநில அரசும், மத்திய அரசும் தங்களால் முடிந்த கொரோனா நிதி உதவியை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து சினிமா துறையில், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதியை கொடுத்துக்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் டோலிவுட்டில் பிரபலமான நடிகரும், முன்னாள் முதலமைச்சரின் மகனுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சுமார் 1.25 கோடி நிதி உதவி அளித்து உள்ளார். அதில் 50 லட்சம் ஆந்திர மாநிலத்திற்கு, 50 லட்சம் தெலுங்கானா மாநிலத்திற்கும் மீதியுள்ள 25 லட்சத்தை கொரோனா நெருக்கடி தொண்டு அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.