Entertainment
மகனின் விவாகரத்து குறித்து நாகார்ஜூனா
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நாயகியாக விளங்கியவர் சமந்தா. இவருக்கும் தெலுங்கு படங்களில் முன்னணி நாயகராக நடித்த நாகசைதன்யாவுக்கும் சில வருடங்கள் முன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஒரு வெப்சீரிஸில் தவறான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்ததாக பேச்சு எழுந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே விரிசல் எழுந்ததாகவும் அடிக்கடி செய்திகள் வந்த நிலையில் நேற்று முறைப்படி இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களின் விவகாரம் குறித்து சமந்தாவின் மாமனாரும், நாகசைதன்யாவின் அப்பாவுமான நாகார்ஜூன் கூறியுள்ளதாவது,
அவர்கள் இருவருக்கும் நடந்துள்ள விசயம் துரதிருஷ்டவசமானது. மேலும் இது அவர்களின் தனிப்பட்ட விசயம் எனவும் கூறியுள்ளார்.
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2021