ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். இவர் பல்வேறு கட்ட போராட்டங்களை பங்கெடுத்து முன்னெடுத்து நடத்தியவர். ஸ்டெர்லைட் பிரச்சினை, எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பலவற்றுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருபவர் இவர்.
சில நாட்களுக்கு முன்பு இவர் திடீரென காணாமல் போனதாக கூறப்பட்டது. நீண்ட நாட்கள் இவரை தேடி வந்த போலீஸ் இறுதியாக ஆந்திராவில் வைத்து கைது செய்ததாக அறிவித்தது.
இந்நிலையில் காவல் முடிந்து இவர் சென்னிமலையில் சில நாட்களாக வசித்து வந்தார். இந்நிலையில் தமிழகம் வரும் மோடிக்கு இவர் கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

