Entertainment
மாரி செல்வராஜின் புதிய படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையா
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் அடுத்ததாக இயக்கிய கர்ணன் படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க இருக்கிறார். கபடி வீரரின் கதையான இந்த கதைக்காக துருவ் விக்ரம் தன்னை தயார் செய்து வருகிறார்.
இந்த நிலையில் எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதியை வைத்து அடுத்த படம் இயக்க இருக்கிறாராம். தென் தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் கதைதான் இதுவும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
