ஆண்களைப் பாதுகாக்க ஆணையம் உருவாக்க வேண்டும்! முதல்வருக்கு வந்த வித்தியாசமானக் கடிதம்!

ஆண்களைப் பாதுகாக்க ஆணையம் உருவாக்க வேண்டும்! முதல்வருக்கு வந்த வித்தியாசமானக் கடிதம்!

ஊடங்கில் வீட்டில் முடங்கியுள்ள ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆணையம் அமைக்க வேண்டும் என முதல்வருக்குக் கடிதம் வந்துள்ளது.

கொரோனாவால் வீட்டில் முடங்கியுள்ள ஆண்களுக்கு பெண்களால் பல வகைகளில் பிரச்சனைகள் எழுந்துள்ளதாகவும் அதனைத் தீர்க்கும் வகையில் முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் ‘ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் இருக்கும் ஆண்களை, குடும்ப வன்முறை விவகாரம் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஆண்களின் நிலை மிக பரிதாபமாக உள்ளது. சட்டங்களை காட்டி, பல ஆண்களை அவர்களது மனைவிகள் மிரட்டுகின்றனர். அடிமைப்படுத்தப்படுகின்றனர்.

பலர் மனதளவில் மனைவிகளால் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். நிராயுதபாணியாக உள்ள ஆண்கள் புகார் கொடுக்க முடியாமலும், வெளியில் சொல்லமுடியாத இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர். எனவே கொரோனா எனும் கொடும் வைரசைவிட, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்னைகளை தெரிவிக்க, ஒரு ஹெல்ப் லைன் சேவையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும். ஆண்கள் ஆணையமும் உருவாக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.