Published
4 years agoon
By
Sriசென்னை தி.நகரில் வசித்து வருபவர் சரண்குமார்(35). இவர் பிரசாந்தி என்கிற பெண்ணை கடந்த 2010ம் தேதி திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிரசாந்தி தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், ஒரு மேற்படிப்பிற்காக பிரசாந்தி 2016ம் ஆண்டு வெளிநாடு சென்றார். எனவே, மகளை கணவரிடம் விட்டு சென்றார். 3 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிய அவர் சென்னை தி.நகரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்கு ராதா என்கிற பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை சரண்குமார் 2வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தது அவருக்கு தெரியவந்தது.
எனவே, இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், பிரசாந்தியை விவாகரத்து செய்துவிட்டது போல் போலி ஆவணங்களை தயார் செய்து ராதாவை சரண்குமார் திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அலறும் இலங்கை பிரதமரின் அலறி மாளிகை- ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்
இயக்குனர் பாலா மனைவியை விவகாரத்து செய்தார்
எஃப்.ஐ ஆர் படத்துக்கு வெளிநாடுகளில் தடை- இந்தியாவில் தெலுங்கானாவிலும் தடை கேட்கும் ஓவைஸி கட்சி
ப்ரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் என்ன பிரச்சினை
அமேசான் ப்ளிப்கார்டில் வேலை- மோசடியை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை
விவாகரத்து பெற்றார் அமீர்கான்