கமல் புதிய படம்- ஆண்டவனுக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்

கமல் புதிய படம்- ஆண்டவனுக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்

கமலை வைத்து இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பை இன்று மாலை அறிவிக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் இன்று காலை டுவிட்டரில் அறிவித்தார்.

எவனென்று நினைத்தாய் என இப்படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டவருக்கு நன்றி என லோகேஷ் கனகராஜ் டுவிட் இட்டுள்ளார்.

அவர் எந்த ஆண்டவரை சொல்கிறார் என தெரியவில்லை. கமல்ஹாசனையும் ரசிகர்கள் ஆண்டவர் என செல்லமாக அழைப்பதுண்டு. தீவிர கமல் ரசிகரான லோகேஷ் கமலை வைத்து இயக்குவதால் கமலுக்கு நன்றி சொல்லியுள்ளார் என அறிந்துகொள்ளலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.