Published
3 years agoon
By
Vinoதமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர் பேச்சில் ’ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதனால், விழித்திருங்கள் – விலகியிருங்கள் –வீட்டிலிருங்கள்’ ஆகியவற்றைப் பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
விடியா அரசு- ஆளும் திமுக அரசு மீது எடப்பாடி கடும் விமர்சனம்
பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு- முதல்வரின் அழைப்பு
தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்
இலங்கைக்கு உதவி செய்ய நினைக்கிறோம்- ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்
தொடர்ந்து வரும் பாலியல் குற்றங்கள்-எடப்பாடி விமர்சனம்