கொரோனா பாதிப்பு இந்தியாவில் பெரும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு வருகிறது. நாளுக்குநாள் கொரோனா அசுர வளர்ச்சி அடைந்து, அதிதிவிரமாக பரவி கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர ஒட்டுமொத்த இந்தியாவே லாக்டோன் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நகரங்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
1. ஈரோடு, தமிழ்நாடு
2. தில்ஷாத் கார்டன், தில்லி
3. நிஜாமுதீன், தில்லி
4. பத்தனம்திட்டா, கேரளம்
5. காசர்கோடு, கேரளம்
6. நொய்டா, உத்தரப்பிரதேசம்
7. மீரட், உத்தரப்பிரதேசம்
8. பில்வாரா, ராஜஸ்தான்
9. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
10. மும்பை, மகாராஷ்டிரம்
11. புணே, மகாராஷ்டிரம்
12. ஆமதாபாத், குஜராத்
13. இந்தூர், மத்தியப் பிரதேசம்
14. நவன்ஷஹர், பஞ்சாப்
15. பெங்களூரு, கர்நாடகம்
16. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஈரோட்டில் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனாவிடம் இருந்து தப்பிக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.