இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையில் தனது 92 வயதில் காலமானார். முன்னதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாச இயந்திர உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும்,
அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவமனை தெரிவித்திருந்தது. எனினும் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் காலமானதாக மருத்துவமனை இன்று அறிவித்துள்ளது.
இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படுகிறார்.