Latest News
இளைஞரை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு
மழை நேரம் வந்துவிட்டாலே மீட்பு பணிகளுக்கு பஞ்சமிருக்காது ஏதாவது மரம் முறிதலும், தெருவில் மின்கம்பிகள் விழுதலும், ஆற்றுவெள்ளத்தில் அடித்து செல்வதும் என ஏதாவது ஒரு விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
இரண்டு நாள் முன்பு மதுரை திருப்புவனம் அருகே ஆற்றில் கவிழ்ந்த காரை இளைஞர் ஒருவர் அதில் இருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்த்தார்.
அதைப்போல் இன்று மரம் முறிந்து விழுந்து ஒரு இளைஞர் மேல் விழுந்தது அவரை உடனடியாக தோளில் தூக்கிய அண்ணாநகர் பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவரை உடனடியாக மருத்துவமனை தூக்கி சென்று காப்பாற்றினார்.
இந்த செய்தி இன்று சமூக வலைதளம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.