இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மகான் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் அதை ரசித்து பார்த்துள்ளனர்.
இந்த படத்தில் கோட்சேதானே காந்தியை சுட்டுக்கொன்றான் என்று சொல்லும் வகையில் வரக்கூடிய வசனம் கூட கார்த்திக் சுப்புராஜுக்கு படத்தில் வைப்பதற்கு சர்ச்சையாக இருந்ததாம்.
இங்கு இதுபோல வசனங்கள் வைப்பது கூட தவறாக இருக்கிறது என தன் ஆதங்கத்தை கார்த்திக் சுப்புராஜ் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் விளக்கியுள்ளார்.