கேரளாவில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பரவத் தொடங்கிய போது இரண்டாவது இடத்தில் இருந்த மாநிலம் கேரளா. பின்னர் அம்மாநில அரசின் சிறப்பான செயல்பாடுகளாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் வெகுவாக பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக உள்ளது. புதிதாகக் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
ஆனாலும் அங்கு தங்கியிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு உணவுக் கிடைக்கவில்லை என்றும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் எனவும் போராட்டம் நடத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனால் இப்போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முதல்வர் பினராயி விஜயன்.
கேரள மாநிலத்தில் உள்ள குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கிராமப்புற சாலை உள்ளிட்டவற்றைச் செப்பனிடும் பணிகளும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.