தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளில் அதிகம் கருத்து சொல்லக்கூடிய நடிகை ஒருவர் உண்டென்றால் அவர் கஸ்தூரிதான். ஏதாவது அதிரடி கருத்துக்களை சொல்லி கொண்டே இருப்பார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அதில் மூத்த உறுப்பினராக இருந்த கல்யாண சுந்தரம் என்பவர் கட்சி மீது அடுக்கடுக்கான அதிருப்திகளை வெளியிட்டு வருகிறார்.
இது குறித்த மீடியாக்களின் விவாத நிகழ்ச்சிகள் பல நடைபெற்று வருகிறது. இதில் அதிரடியான, சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வரும் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பங்கேற்று கருத்து சொல்லி வருகிறார்.
அதிகமான விவாத நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடிவதால், நடிகை கஸ்தூரி நகைச்சுவையாக ஒரு அவரை பற்றி ஒரு விசயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் உட் கட்சி விவகாரத்தை சம்பந்தப்பட்டவர்களை விட சவுக்கு சங்கர்தான் வரிந்து கட்டி பேசி கொண்டே இருக்கிறார். எங்கு நோக்கினும் சவுக்கு பேட்டிதான் ரணகளத்திலும் ஒரு குதூகலமா என கஸ்தூரி கேட்டுள்ளார்.





