மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை புகழையும் பெற்றது. தினம் ஒருவர் இப்படத்தை சிலாகித்து பாராட்டி வருகிறார்கள். இதில் பல பிரபலங்களும் தினசரி இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் கர்ணன் படத்தைக் கண்ட பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக அற்புதம் மற்றும் புத்திசாலித்தனம். இவ்வாறுதான் கர்ணன் படம் பார்த்த அனுபவத்தை கூறமுடியும். மாரி செல்வராஜ் எப்படியொரு கதையை கூறியுள்ளீர்கள். உங்களது எண்ணங்களை அருமையாக தீட்டி இருக்கிறீர்கள். தனுஷ் நான் உங்களை ஒரு நடிகர் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் ஒரு மந்திரவாதி” என புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.





