Connect with us

கன்னியாகுமரியில் சோகம்- தம்பி இறந்த அதிர்ச்சியில் அண்ணன் மரணம்

Latest News

கன்னியாகுமரியில் சோகம்- தம்பி இறந்த அதிர்ச்சியில் அண்ணன் மரணம்

கன்னியாகுமரி அருகேயுள்ள தக்கலையை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். சமீபத்தில் புதிதாக இன்னோவா கார் புதிதாக வாங்கியுள்ளார் ஆனால் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால் அதற்கு லோன் கட்ட முடியாமல் திணறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற இவர்  ரூமிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவை திறக்காததால் அருகே உள்ள வீட்டில் இருந்த ஸ்ரீகண்டன் சகோதரர்களான மணிகண்டன், மற்றும் பிரபாகரனிடத்தில் கூறியுள்ளார் அவர்கள் கதவை உடைத்து ஸ்ரீகண்டனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இதை கேட்டவுடன் மயங்கி விழுந்த ஸ்ரீகண்டனின் சகோதரர் மணிகண்டன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார் மயங்கி விழுந்த மணிகண்டனும் மாரடைப்பு ஏற்பட்டு உடனே இறந்தார் அண்ணன் தம்பி உடனடியாக இறந்த நிகழ்வு தக்கலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  சுபஸ்ரீ மரணம் ; பேனர் வைத்த கவுன்சிலருக்கு நெஞ்சுவலி : மருத்துவமனையில் அனுமதி
Continue Reading
You may also like...

More in Latest News

To Top