ஐஸ்வர்யா சில வருடம் முன்பு நடித்து வெளியான படம் கனா. இதில் கிரிக்கெட் போட்டியில் கஷ்டப்பட்டு முன்னேறி வரும் கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார்.
இந்த நிலையில் இதே போன்ற ஒரு கதையில் ஐஸ்வர்யா ராஜேஸ் மீண்டும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். இவரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாக இருக்கிறது.
அறிமுக இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். புதுக்கோட்டை அருகே சாந்தி செளந்தரராஜனின் சொந்த கிராமத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
இந்த கதையில் ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா ராஜேஸின் பி.ஆர். ஓ இதை மறுத்துள்ளார்.

