Latest News
வேளாண்சட்டங்களை எதிர்த்து ஜனவரி26ல் வித்தியாசமான பேரணி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டம் கடந்த 1மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுவாகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
இந்நிலையில் போராட்டத்தின் அடுத்த முயற்சியாக வரும் ஜனவரி 26ல் குடியரசு தினத்தை முன்னிட்டு 1 லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக சொந்த ஊர்களில் இருந்து டெல்லிக்கு டிராக்டர்களில் விவசாயிகள் வந்த வண்ணம் உள்ளனர்