திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உலகப்புகழ்பெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். மாதம் மாதம் தவறாமல் இங்கு நடக்கும் பவுர்ணமி கிரிவலத்திலும் மக்கள் பங்கு கொள்கின்றனர்.
அதிலும் சில வருடங்களாக கட்டுக்கடங்காமல் கிரிவலத்தன்று லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். மற்ற கோவில்களில் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே வரும் பெரும் திருவிழாவுக்கு போலீஸ் பந்தோபஸ்து, மக்கள் வெள்ளம் என விழாக்கோலமாக இருக்கும்.
திருவண்ணாமலையில் மட்டும் மாதா மாதம் நடக்கும் பவுர்ணமி கிரிவலமே ஒரு பெரும் திருவிழா போல்தான் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை நகரில் இருந்து கிரிவலப்பாதை 14கிமீ சுற்றளவில் இருக்கிறது. இந்த பாதையில் சில வருடங்களாக அதிகமான கோவில்கள் வந்து விட்டன.
இந்த பாதையில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது அதன் பெயர் இடுக்கு பிள்ளையார் கோவில். திருவண்ணாமலையில் இக்கோவில் மிகவும் ஃபேமஸ்.
இக்கோவில் சின்னக்கோவில்தான் ஆனால் இடுக்கு போன்ற ஒரு சின்னப்பாதைக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு அதுவழியாகவே வர முடியும் என்பது ஆச்சரியம்.
இங்கு வழிபட்டால் இடுப்பு கை கால் வலி அனைத்தும் தீரும் என்பதும் நம்பிக்கை.
இங்கு பிள்ளையார் நந்தியுடன் இருப்பது சிறப்பு. அடுத்த முறை கிரிவலம் செல்லும்போது இங்கு தவறாமல் சென்று வாருங்கள்.கிரிவலப்பாதையிலேயே இக்கோவில் உள்ளது

