இந்தியளவில் கொரொனா பரவலால், அனைத்து கல்வி நிலையங்களும் முடக்கப்பட்டு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுதேர்வு வரும் ஜீன் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, கொரொனா தாக்கம் தமிழகத்தில் அதிக அளவில் பரவியுள்ளதால், 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக்கோரிய பொதுநல வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்தவர் மனுவை வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்? என்று நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

