அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான கனமழை

அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான கனமழை

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. தலைநகரம் சென்னையும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கடும் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கடும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.