Latest News
இலங்கையில் வரலாறு காணாத கனமழை
இந்தியாவில் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மழைபெய்தாலே அருகில் உள்ள நாடான இலங்கையிலும் கனமழை பெய்யும். இந்த வருடம் பெய்த கனமழையில் சென்னை நகரம் மூழ்கி இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையில் பல நகரங்கள் மூழ்கிவிட்டன.
குறிப்பாக இலங்கையில் உள்ள புத்தளம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மிகப்பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இருக்கும் நல்லூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது.
சூரசம்ஹாரம் விழாவும் நடக்க இருக்கும் நிலையில் அந்த பகுதிகள் முழுவதும் குளம் போல் காட்சி அளிக்கின்றன.
