ஆயிரக்கணக்கில் கள்ளச்சாராய விலை! கொடிகட்டி பறக்கும் வியாபாரம்!

ஆயிரக்கணக்கில் கள்ளச்சாராய விலை! கொடிகட்டி பறக்கும் வியாபாரம்!

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளச்சாராய விற்பனை அதிகமாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு 29 நாட்களாகியுள்லது. அதனால் மது விரும்பிகள் போதைக்காக என்ன செய்வது என்ற தவிப்பில் உள்ளனர். அந்த தவிப்பைப் பயன்படுத்திக் கொண்டு பலரும் கள்ளச்சாராய விற்பனையில் இறங்கியுள்ளனர்.  அதைத் தடுப்பது போலீஸாருக்கு மிகப்பெரிய பணியாக அமைந்துள்ளது. கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளதால் கள்ளசாரயம் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கள்ளசாராயத்தை வாங்கி கடையில் பதுக்கி வைத்த கடைக்காரர் ஒருவர் அதை லிட்டர் ரூ.1300 என்று விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மந்தூர் போலீசார் கள்ளசாராயம் விற்ற பெருமாளின் கடையை சோதனையிட்டதில் அவர் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.