கடந்த 2010ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரஜினியின் திரைப்பட வரலாற்றில் முக்கியமான திரைப்படமாகும்.
இப்படத்தை இயக்கியவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஆவார்.இப்படத்தை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகும்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இப்படம் பல கோடி வசூலை ஈட்டியது. இந்த படத்தின் கதை தன்னுடைய கதை என அரூர் தமிழ்நாடன் கூறி இருந்தார். கலாநிதிமாறன் தனக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் . ஜூகிபா என்ற பெயரில் வார இதழில் வெளியான என் கதையை திருடித்தான் எந்திரன் படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடர் வழக்குகளை தொடுத்து வந்தார் அரூர் தமிழ்நாடன்.
இது எல்லாவற்றையும் உயர்நீதிமன்றம் தொடர்ந்து புறக்கணித்தது. இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு தரப்புக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்துக்கும் சென்றுள்ளார் அரூர் தமிழ்நாடன்.