பல வருடங்கள் ஆகியும் வராத பார்ட் 2 திரைப்படம்

பல வருடங்கள் ஆகியும் வராத பார்ட் 2 திரைப்படம்

தற்போது நிறைய படங்கள் பார்ட் 2 வருகின்றன. சில படங்கள் முதல் படத்திலேயே கதையில் சத்து இல்லாவிட்டாலும், இரண்டாம் பாகம் வரும் கொடுமையும் நடக்கிறது.ஆனால் கடந்த 1989ல் வெளிவந்த நாளைய மனிதன் படம் முடிவில் அதன் இரண்டாம் பாகம் அதிசய மனிதன் வரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு வருடத்திலேயே அதிசய மனிதன் படம் வந்தது. அதிசய மனிதன் படத்தில் நாளைய மனிதன் படத்தில் யாராலுமே மரணிக்க வைக்க முடியாத ஒரு மனிதனை கதாநாயகன் பிரபு கொன்று விடுவார். அமானுஷ்யமான அந்த மனிதன் விகாரமான உருவத்தோடு வந்து மீண்டும் கொல்வார் அந்த வேடத்தில் நடிகர் அஜய் ரத்னம் நடித்திருந்தார். அதிசய மனிதன் படத்தின் முடிவில் யாராலும் கொல்ல முடியாத அந்த மனிதனை நிழல்கள் ரவி வித்தியாசமான முறையில் கொல்வார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் எலும்பு மனிதனாக உருமாறி நிற்பார் அஜய்ரத்னம்.

அடுத்த பார்ட் எலும்பு உடலுடன் தொடரும் என அறிவிக்கப்பட்டு இன்று வரை இயக்கப்படாமல் உள்ளது. நல்ல சத்தான முதல் இரண்டு பாகங்களின் கதையை யாராவது எலும்பு மனிதனாக 3வது பாகமாக இயக்கினால் நல்ல வரவேற்பு பெறும் என்பது உண்மை.

நாளைய மனிதன் படத்தை  அவர்களும் அதிசய மனிதன் படத்தை வேலு பிரபாகரன் அவர்கள் இயக்கி இருந்தார்கள்.