தமிழகத்தில் கொரோனாவை ஒரேயடியாக தளர்த்த முடியாது என மருத்துவக் குழு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழக முதல்வருடன் 19 மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை செய்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனைக்குப் பின்னர், மருத்துவ குழு பேட்டியளித்தனர். அதில், ஒரே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்த முடியாது எனவும், ஊரடங்கை படிப்படியாக விலக்கலாம் ; அப்படி விலக்கினாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும்; ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது. தமிழகத்தில் தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகுதான் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.