சொந்த தொகுதியில் கோட்டை விட்ட பழனிச்சாமி

இப்படி ஆகிப்போச்சே ! சொந்த தொகுதியில் கோட்டை விட்ட பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரில் திமுக வெற்றி பெற்றுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற 39 மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களையும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக அதிமுக இருக்கும் நிலையில், இப்படை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது அந்த கட்சிக்கு கிடைத்த மாபெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை தோற்கடித்துள்ளார். இப்படி சொந்த தொகுதியிலேயே பழனிச்சாமி கோட்டை விட்டு விட்டாரே என அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.