கொரோனா நிவாரணம்! தேமுதிக 5 கோடி அறிவிப்பு!

கொரோனா நிவாரணம்! தேமுதிக 5 கோடி அறிவிப்பு!

கொரோனா நிவாரணமாக தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மே 5 ஆம் தேதிக்குப் பின்னர் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உள்ளது. இதனால் முதலில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனிநபர்களும், அரசாங்கமும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான தேமுதிக 5 கோடி ரூபாய் மதிப்பிலானப் பொருட்களை நிவாரணமாக அளிக்க முடிவு செய்துள்ளது. இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மே 3ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு,  சமூக இடைவேளி,  இவையெல்லாம் நீங்கிய பிறகு தேமுதிக சார்பில்  மாவட்ட வாரியாக நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள்,  மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும்.

உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை, மருத்துவம், வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம் தாயராக இருப்போம். கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம் தேதிக்கு பின்னர்  கழக நிர்வாகிகள் ஒவ்வொரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க  தயாராக இருங்கள் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.