Published
1 year agoon
பகல் நிலவு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம். ஒரே மசாலா டைப் படங்களாக வந்து கொண்டிருந்த காலத்தில் வித்தியாசமான படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இவர்.
மெளனராகம் , நாயகன், அக்னி நட்சத்திரம், ரோஜா, பாம்பே என இவரின் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னத்துக்கு புனேவில் உள்ள எம்.ஐ.டி அமைதி கல்வி நிறுவனம் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை செய்ததற்காக இவருக்கு பாரத் அஷ்மிதா என்ற விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இணைய வழியிலேயே இந்த விருது இன்று மணிரத்னத்துக்கு வழங்கப்படுகிறது.