இயக்குனர் ஜி.எம் குமாரின் விபரீத ஆசை

இயக்குனர் ஜி.எம் குமாரின் விபரீத ஆசை

இயக்குனர் ஜி.எம் குமார் ஒரு காலத்தில் அறுவடை நாள், இரும்பு பூக்கள், பிக்பாக்கெட் படங்களை இயக்கியவர். பாக்யராஜிடம் அசிஸ்டண்ட் ஆக இருந்தவர். பாலா இயக்கிய படங்களில் நடிகராக பிரபலமடைந்தார். இருந்தாலும் வசந்தபாலனின் வெயில் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இவரின் டுவிட்கள் எப்போதும் வித்தியாசமாக இருக்கும்.

இதோ வித்தியாசமாக அவர் எழுதியுள்ள டுவிட்.

எதாவது ஒரு விபத்தில் என் நினைவுகளை இழந்து விட்டால் அதில் என் திருமணத்தையும் மறந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் நடு ரோட்டில் நின்று கொண்டு இருக்கிறேன் எவனாவது குடித்து விட்டு வண்டி ஓட்டிக் கொண்டு வரமாட்டானா என்ற நப்பாசையில்…

இவ்வாறு ஜி.எம் குமார் டுவிட்டரில் கூறியுள்ளார்.இவருக்கு ஏன் இந்த விபரீத ஆசை.