Director bala

ஆர்.கே.சுரேஷை மீண்டும் இயக்கும் பாலா – அதிரடி அறிவிப்பு

நடிகர் ஆர்.கே. சுரேஷை வைத்து இயக்குனர் பாலா ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

விக்ரம் மகன் துருவை வைத்து ‘வர்மா’ படத்தை இயக்கினார் பாலா. ஆனால் படம் முடிந்த நிலையில், அப்படத்திலிருந்து அவரை தூக்கிவிட்டு, வேறு இயக்குனரை வைத்து அப்படம் ‘ஆதித்ய வர்மா’ என்கிற தலைப்பில் மீண்டும் எடுக்கப்பட்டது.

எனவே, பாலா ஆர்யா, அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இடையில் சூர்யா பேரும் அடிபட்டது. ஆனால், தற்போது நடிகர் ஆர்.கே.சுரேஷை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜோஷப்’ திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பாலா தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவுள்ளது. மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.