சிறந்த சேவைக்காக டிஜிபியால் பாராட்டப்பெற்ற எஸ்.பி

சிறந்த சேவைக்காக டிஜிபியால் பாராட்டப்பெற்ற எஸ்.பி

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக இருப்பவர் அரவிந்தன். ஒரு பிரச்சினை என்றால் அதை உடனடியாக கவனித்து வேகமாக நடவடிக்கை எடுப்பதில் வல்லவர் இவர். எல்லா பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு கொடுத்து வந்தார்.

கோவிட் 19 கொடூரமான லாக் டவுன் காலத்தில் இவர் சேவை போற்றத்தக்கதாய் இருந்தது. இதற்காக இவர் செயலியும் கண்டுபிடித்திருந்தார்.

கொரோனா நேரத்தில் யாரோ ஒரு போலீஸ் காய்கறி லாரியை கொண்டு செல்ல விடாமல் தடுக்க அனைத்து காய்கறிகளையும் அந்த வண்டிக்காரர் கீழே கொட்டி விட்டு சென்றார்.

இதை பார்த்த அரவிந்தன் எஸ்.பி அந்த காய்கறிக்காரரின் வீட்டுக்கு சென்று நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இப்படி பல நன்மதிப்புகளை பெற்ற எஸ்.பி அரவிந்தனை டிஜிபி திரிபாதி விருது வழங்கி பாராட்டியுள்ளார்.