கோவை மாநகரப்பகுதிகளான கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் உள்ள மோகன் நகர், ஓம் சக்தி நகர் பகுதிகளில் குழந்தைகளுடன் சுற்றி திரிந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆன்செய்து பார்த்ததில் இந்த பெண்கள் சிலரது வீட்டை நோட்டமிட்டதுடன் வெளியில் இருந்த மூட்டை உள்ளிட்ட சில பொருட்களை திறந்து பார்த்தது தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள
மோகன்நகர் பகுதியில் அமைந்துள்ள ஒருவர் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த இரண்டு பெண்களும் அங்கிருந்த பொருட்களை கவனிப்பது போன்ற காட்சிகள் வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டிருத்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், வீட்டு வாசல் அருகே இருந்த மூட்டைகளை ஒருவர் திறந்து பார்க்க, மற்றொரு பெண் ஆள் நடமாட்டத்தை கண்காணித்துள்ளார்.
இதனிடையே சந்தேகத்திடமாக சுற்றி திரியும் மர்ம பெண்களை போலீஸார் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.