இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,970ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று, சென்னையில் மட்டும் 309 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 434 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,674 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 15ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
