தமிழகத்தில், கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே இன்று 618 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,744ல் இருந்து 13,362ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 874 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,372 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 29ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

