இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333ஆக உயர்வு மற்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆக உயர்வு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 827 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,545 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 28ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:



