தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக சென்னையில் மட்டும் சுமார் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, ஆக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,795ஆக உயர்வு. சென்னையில் ராயப்புரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் நோய் தொற்று பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறைக்கு கடும் சவால்லாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 776 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,191 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 21ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

