கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்குநாள் அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 69 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள். இன்றைய தினமான ஏப்ரல் 07ல், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.
