இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழத்தில் மிக அதிகபட்சமாக இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் புதியதாக 103 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 12 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 121 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,937 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 28ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
