இந்தியாவில் கொரொனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மே 3ஆம் தேதி வரை 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், திருப்பூரில் மட்டும் இன்று ஒரே நாளில் 28 பேருக்கும், சென்னையில் 7 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 49 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1323 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 18ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
