Connect with us

Latest News

கொரோனா விதி மீறல் 1 கோடி வசூல் செய்த டெல்லி அரசு

Published

on

கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடம் இருந்து ஞாயிறன்று 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்துள்ளது டில்லி அரசு.

டில்லியில் ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடமிருந்து டில்லி அரசு ஞாயிறன்று 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2ம் தேதி டில்லி அரசு அமலாக்க முகமையால் கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்கள் மொத்தம் 5,066 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், 45 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி அரசு அதிகாரிகள் கூறினர்.

ஜனவரி 1ம் தேதி டில்லி அரசாங்கத்தின் அமலாக்க நிறுவனம் கொரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடமிருந்து சுமார் 99 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று தொற்று பாதிப்பு விகிதம் 6.5 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகரில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது, 14 லட்சத்து 54 ஆயிரத்து121 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,397 ஆகவும், அவர்களில் 4,759 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாருங்க:  வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா