கடந்த வருடம் 2020 மார்ச் மாதம் 25ம் தேதி முழு ஊரடங்கு தொடங்கியது. இந்த காலத்தில் கடும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 21 நாட்கள் கடும் ஊரடங்கு தொடங்கியது. சிறிது காலம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மட்டும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஏழு மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் முழு ஊரடங்கு நாளை தமிழகத்தில் நடக்க இருக்கிறது.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனைவரும் அனுமதிக்கப்படுவர் என தெரிகிறது. அதனால் நாளை வாங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசிய தேவைகளை இன்றே மக்கள் நிறைவேற்றிக்கொள்ளுதல் நலம்.

