Latest News
முதல்வர் எடப்பாடியை டுவிட்டரில் ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிக எளிமையான முதல்வர் என்ற பெயரை சமீபகாலமாக பெற்று வருகிறார். இதனால் அவரது டுவிட்டர் கணக்கை ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சமீப காலமாக நடைபெற்று கொடூரமான கொரோனா யுத்தத்தில் முதல்வர் எடப்பாடியின் டுவிட்டர் கணக்கு மூலம் பல சீரிய செயல்கள் ஆற்றப்பட்டுள்ளன.
கொரோனாவால் பல இடங்களில் சிக்கி தவித்தவர்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் முதல்வர் எடப்பாடியின் டுவிட்டர் கணக்கில் தங்களது துயர நிலை குறித்து போஸ்ட் போட்டனர்.
இதை பார்த்த முதல்வரும் தன்னால் முடிந்த உதவிகளை கொரோனா காலங்களில் செய்துள்ளார். இதனால் முதலமைச்சரை ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்துள்ளது.