நடிகை த்ரிஷா பல சமூகப்பணிகளில் ஆர்வம் உள்ளவர். தெருவோரம் இருக்கும் நாய்கள் உள்ளிட்டவற்றை தன்னால் முடிந்த வரை பராமரித்து வருகிறார் இவர். இவர் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராகவும் இருக்கிறார்.
அதில் குழந்தைகள் உரிமைக்காக நல்லெண்ண தூதுவராக இவர் இருந்து வருகிறார். இவர் கூறி இருப்பதாவது.
கொரோனா காலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொண்ட சில பணியாளர்களை பாராட்டுகிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கும்,
தொன்றுதொட்டு இது ஒரு கலாசாரம் போல இருந்துவரும் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு வளையம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதிகாரத்தில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள், வளரும் இளம் பெண்களின் குரலுக்கு செவிசாய்த்து அவர்களின் கல்வி மற்றும் திறன்களில் சிறந்த உலகத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பாலின அடிப்படையிலான வன்கொடுமை, மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய சட்டம் குறித்து ஆராய வேண்டும் என்று த்ரிஷா கூறியுள்ளார்.