ஏப்ரல் 20 ஆம் தேதி யார் யாருக்கெல்லாம் அனுமதி! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்

ஏப்ரல் 20 ஆம் தேதி யார் யாருக்கெல்லாம் அனுமதி! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்

ஏப்ரல் 20 ஆம் தேதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படும் என மோடி அறிவித்திருந்த நிலையில் அதற்கான வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கீழ்க்காணும் தொழிற்துறைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

  1. விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பழுது நீக்கும் தொழிலகங்கள் இயங்கலாம். விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி
  2. மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை நீட்டிக்கப்படுகிறது.
  3. நகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள தொழிலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்,
  4. நூறு நாள் வேலை ஏப்ரல் 20 முதல் தொடங்கலாம். பணியாளர்கள் தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து வேலை செய்ய வேண்டும்,
  5. எலக்ட்ரீசியன், பிளம்பர், தச்சு வேலை செய்வோர் தங்கள் தொழிலுக்கு செல்லலாம்
  6. திரையரங்குகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  7. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள், ஏற்றுமதி தொடர்பான வேலைகளில் ஈடுபடலாம்.
  8. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது.