hotspot district in TN
hotspot district in TN

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்! மத்திய அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில், இன்று கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாகவும், இன்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரானாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் இறந்துள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,437-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதில், தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக:சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு. வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி. கடலூர், திருவள்ளூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது, இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்தபடவுள்ளதாக கூறப்படுகின்றது.