தேவையான பொருட்கள்:
வறுத்து பொடிக்க :
சிவப்பு மிளகாய் -4
மல்லி-1 மேஜைக்கரண்டி
1 தேக்கரண்டி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து, இடித்து, போடி செய்து, தயாராக வைத்துக்கொள்ளவும்.
கத்திரிக்காய் – 1/2 கிலோ
வெங்காயம்-1 பெரியது
தக்காளி -1 பெரியது
கறி வேப்பிலை
உப்பு -1 தேக்கரண்டி
புளி -1 மேஜைக்கரண்டி சாறு
கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் வெட்டிவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிதம் செய்யவும்.
நறுக்கிய. கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் ,
2 கோப்பை நீர் சேர்த்து நன்கு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
பிறகு, மையாக கடைந்து கொள்ளவும், வறுத்து பொடித்த மிளகாய், மல்லி போடி சேர்த்து,
உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
மல்லி இல்லை தூவி பரிமாறவும்.
இதை இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம், சாப்பாட்டுக்கும் கூட்டு போல தொட்டு கொள்ளலாம்.