அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை ஓவர் - பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை ஓவர் – பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

தொகுதி பங்கீடு குறித்து பாஜகவுடன் நடத்தபட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து, அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதியாகி விட்டது. அதேபோல், அதிமுக – பாஜக கூட்டணியும் விரைவில் உறுதியாகவுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் இணையவுள்ளது.

அதிமுக, பாமக உடனான பேச்சுவார்த்தை இன்று காலை முடிவுக்கு வந்தது. முடிவில், பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிவித்தார். மேலும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் பாமகவிற்கு ஒதுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அதேபோல், பாஜகவுடனான பேச்சுவார்த்தையும் முடிவிர்கு வந்துள்ளது. இதற்காக பியூஸ் கோயலுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் முன் அறிவித்தார்.