நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருந்த பினராயி விஜயனே மீண்டும் வெற்றி பெற்று இன்று முறைப்படி முதல்வராக பதவியேற்றார். அவருக்கு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
என் நேசத்திற்குரிய சகாவு
இன்று கேரளத்தின் முதல்வராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். நான் உத்தேசிக்கிற அரசியலுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறவர்.
நேர்மையான திறமையான நிர்வாகத்தினால் எந்த இடரையும் முறியடிக்கலாம் என நிரூபித்துக்காட்டிய நண்பரை இன்று போனில் வாழ்த்தினேன். அடுத்த ஐந்தாண்டுகளில் கேரளம் பட்டொளி வீசி பறக்கட்டும். இன்னும் இன்னும் சிறக்கட்டும் என கமல் தெரிவித்துள்ளார்.